பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108


போலீஸ் படையினர் எங்கேனும் செயலாற்றுவதில் தவறிழைத்தால், சமுதாயத்தில் நிலவும் குறை பாடுகளையே அவை காட்டுகின்றன.

தங்களால் உருவாக்கப்படாத பிரச்சனை களுக்குத் தீர்வு காண வேண்டியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். முரண்பாடு ஏற்படுகிற இடங்களில் எல்லாம் அவர்கள் இருந்தாக வேண்டி இருக்கிறது. சகல விதத்திலும் சகிப்புத்தன்மையோடு அவர்கள் நடந்துகொள்ள வேண்டியுள்ளது. உள்ளக் கொந்தளிப்பு அடையாமல், பற்றற்ற அமைதியுடன் நடந்து கொள்ளவேண்டியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். பெற்ற சிறந்த பயிற்சிக் கொப்பக் கடமை உணர்ச்சி மிக்கவர்களாக அவர்கள் நடந்து கொள்ளவேண்டியுள்ளது.

தமிழ் நாட்டுப் போலீஸ் படையினைக் குறித்து இம்மாநிலத்துக்கு வெளியே நான் சென்ற இடங் களில் வெகு உயர்வாகக் கூறக் கேட்டிருக்கிறேன். குறிப்பாகக் குற்றங்களுக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிப்பதில் தமிழ்நாட்டுப் போலீசாருக்குள்ள ஆற்றலை அவர்கள் மெச்சியுரைத்திடக் கேட்டிருக்கிறேன்.

அண்மைக் காலத்தில் சென்னை மாநகரில் தொடர்ச்சியாக முகமூடிக் கொள்ளைகள் நடந்த போது, இம்மாநிலத்துக்கு வெளியே பலர் என்னைக் கேட்டனர். இவற்றை எப்படிச் சமாளிப்பார்கள் உங்கள் போலீஸ் படையினர் என்று என்னிடம் தங்கள் ஐயப்பாட்டைத் தெரிவித்தார்கள். அத்