பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109


தகைய நேரத்தில் அந்தக் கொள்ளைகளின் பின்னால் இருந்த மர்மத்தைக் கண்டுபிடித்ததோடு இந்தியா, முழுவதும் சுற்றி அ8லந்த அந்தக் கொள்ளைக் கும்பலின் தலைமையகம் எது? கிளைகள் எங்கெங்கு இருக்கின்றன? என்பதை எல்லாம் தமிழ் நாட்டுப போலீசார் கண்டுபிடித்தனர். இது அவர்களது சாதனை மகுடத்திற்குக் கிடைத்த மற்றொரு முத்தாகும்.

சென்னை நகரில் தொடர் தீ விபத்துக்கள் நடைபெற்றபோது, கண் இமை மூடாது இராப் பகலாகத் தொண்டாற்றினர் நம் போலீஸ் படையினர். அவர்களும் சமுதாயத்தின் ஓர் அங்கம் என்பதால், ஏழை எளியோரது துயரத் துடிப்பை அவர்களும் அறிந்திருப்பவர்களே. அதனால்தான் அவர்களும் தீயணைப்புப் படையினரும் அத்தனைப் பாடுபட்டார்கள்.

சட்டம் ஒழுங்குப் பிரச்சனை பொறுத்துக் குறைகளைக் கூறிப் பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதுவோர் இருக்கக்கூடும். ஆயினும், எவரும் போலீஸ் படையினரைக் குறை சொல்வதில்லை. படையின் தலைவர்களையே குறை சொல்கின்றனர். இவ்வகையிலும் தீவிரமாகச் செயல்பட்டு முதல் நிலையைப் பெறவேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன்.

ஜன நாயகமானது பல்வேறு பிரச்சினைகளைக் கிளறிவிடுகிறது. சட்டம் ஒழுங்குப் பிரச்சினை