பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10


தருவதில்லை," என்று குறிப்பிட்டதைக் கேட்டுத், " தியாகராசர் பேரால் மன்றம் வைத்திருக்கிருேம்," என்றார்கள். -

தென்னகத் தலைவர்கள் மதிக்கப்பட வேண்டியது அவசியம் என்பதை நாம் உணருகிறோம்.

மாற்றுக் கட்சியினராக இருந்தாலும், அவர்களுடைய அனுபவங்கள் நமக்குப் பயன்பட வேண்டும் என்று நாம் நினைக்கின்றோம்.

இந்த நேரத்தில் கழகத் தோழர்களுக்கு மிக முக்கியமானதைக் குறிப்பி ட விரும்புகிறேன். ஆட்சிப் பொறுப்புக்கு நாம் செல்லும் இந்த நேரத்தில் சர்க்கார் வேறு, கட்சி வேறு என்பதை உணர வேண்டும். இதனால் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறவர்கள் கட்சி வேலையில் ஈடுபடமாட்டார்கள் என்பது பொருளல்ல. ஆட்சிப் பொறுப்பில் அவர்கள் பணியாற்றும்பொழுது, எல்லோருக்கும் பொதுவானவர்கள். கட்சிப் பணியாற்றும்பொழுது அவர்கள் முழுக்க முழுக்கக் கட்சிக்காக வேலை செய்வார்கள்,

சர்க்கார் என்பது வேறு, கட்சி என்பது வேறு. நாடு என்பது நிரந்தரமானது. சர்க்கார் என்பதும் நிரந்தரமானது. ஆளுங்கட்சி மாறிக் கொண்டிருக்கலாம். நாம் கட்சி வேலை செய்ய வேண்டிய இடம் தி.மு.க. தலைமை நிலையங்களான அறிவகம், அன்பகம் ஆகும். சர்க்கார் அலுவலகம் அறிவகமல்ல, அன்பகமுமல்ல. அது அறிவு அகமாகவும் அன்பு அகமாகவும் இருக்கலாம்.