உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18

சென்று பதவியை ஏற்றுக் கொண்டோம். அந்தத் தியாகிகள் இட்ட பிச்சையே தி.மு.க. அமைச்சரவை என்று நாங்கள் கருதுகிறோம். எங்களுடைய அறிவால் மட்டும் அடைந்தது அஃது என்று நினைக்க வில்லை.

வகைப்பாடு : ஜனநாயகம்—பிரச்சினைகள்

(26-2-67 அன்று சென்னைப் பச்சையப்பன் கல்லூரி அறநிலையக் காப்புக்குழுவின் 124-வது ஆண்டு விழாவிற்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை)


மாணவர்

வயலுக்கு நாற்றங்காலில் பயிரை வளர்ப்பார்கள்.
அது போல், எதிர்கால வயலுக்கேற்ற நாற்றங்கால்
பயிராகப் பள்ளிப் பிள்ளைகள் இருக்கிறார்கள்.

பேரறிஞர் அண்ணா