இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
21
லாதது! எங்கள் தகப்பனர், பாட்டனர், தமையன், மாமா, உறவினர், விருது பெற்றோர் என்று பாராட்டப்பப்படும் அளவில் ‘விருது பெற்ற குடும்பம்’ என வழி வழியாக உங்களுக்குப் போற்றுதல் கிடைக்கும். அப்படிப்பட்ட போற்றுதலுக்கு ஆளான ஆசிரியர்களுக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டு, அந்தத் தூய பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
(27-8-67 அன்று சென்னையில் தொடக்கப் பள்ளி ஆசிரிகளுக்கான ஏழாவது விருதளிப்பு விழாவிற்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை)
சமூக மேம்பாடு
ஒரு நேரமாயிலும், நாட்டின் பொது நன்மைக்காகச்
செலவிடுவேன் என்று உறுதி கொண்ட, சில ஆயிரவர்
தமது உழைப்பினைத் தந்திடின் சமூக மேம்பாடு வளரும்.
செலவிடுவேன் என்று உறுதி கொண்ட, சில ஆயிரவர்
தமது உழைப்பினைத் தந்திடின் சமூக மேம்பாடு வளரும்.
— பேரறிஞர் அண்ணா