பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29


ஜைனமதத்தைச் சேர்ந்தவர்களும் மருத்துவ மனைகளையும் கல்லூரிகளையும் ஏற்படுத்தித் தாங்கள் ஈட்டிய பொருளை நல்ல செயல்களுக்குப் பயன்படுத்துவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நான் பிறந்த காஞ்சிபுரத்திலும் அதைச் சுற்றிய சிற்றுார்களிலும் ஜைன மதத்தைச் சார்ந்த மக்கள் இருக்கின்றார்கள். அவர்களுடன் எனக்குத் தொடர்பும் உண்டு.

“ இந்து மார்க்கம் தமிழர்களுக்கே உரிய மார்க்கம்” என்று தமிழாய்ந்த வல்லுநர்கள் சிலர் கூறுகின்றனர். ஆகவே, இந்த மார்க்கத்தில் எனக்குத் தொடர்பும் ஈடுபாடும் உண்டு என்பதைத் தெரிவித்துக்கொள்கிறன்.

உலகத்திலேயே நம்முடைய நாட்டில்தான் பெரும் பெரும் மகான்கள் வழிகாட்டிகள் தோன்றி இருக்கிறார்கள். நான்கூடச் சில சமயம் நினைத்துப் பார்ப்பேன். 'இப்படிப்பட்ட பெரியவர்கள் தோன்றாமல் இருந்திருக்கலாம். அவர்கள் தந்த அந்த நல்ல சிந்தனைகள் தோன்றாமல் இருந்திருக்கலாம் என்று. பெருமைக்குரிய வழிகாட்டிகள் பலர் இருந்துங்கூட, " நாம் இந்த அளவுக்குக் கெட்டுப் போயிருக்கிறோம் உயர்ந்த நிலையில் இல்லையே”. என்பதால்தான், அப்படிக் கருதத் தோன்றியது.

இதுபேன்ற வழிகாட்டிகளே தோன்றாத நாடுகளில் எவ்வளவோ முன்னேறி இருக்கின்றார்கள். வளர்ச்சி அடைந்திருக்கின்றார்கள். ஆனால் வழி காட்டிகள் இருந்தும், அவர்கள் வழிநடத்திச் செல்