இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
32
சொல்லிக் கொண்டோரையும், தாழ்ந்தவர் எனக் கூறப்பட்டோரையும், தமக்குப் பின்னே வழி நடத்திய மாமனிதர் மகாவீரர். அவர் பின் செல்லவும், அவர் விட்டுச் சென்ற நல்ல செயல்களை நாமும் கடைப்பிடித்து ஒழுகி, அதன் மூலம் நல்ல வாழ்க்கை வாழவும் வேண்டும்.
நான் நல்ல வாழ்க்கை என்று கூறுவது, “நாம் மட்டுமல்லாது, பிறரும் உலகத்தில் மகிழ்ச்சியடையக் கூடிய அளவில் வாழ வேண்டும்” என்பதைத்தான் நல்ல வாழ்வு எனக் கருதி, மக்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டு விடை பெறுகிறேன்.
(22-4-67 அன்று சென்னை ஜைன சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மகாவீரர் பிறந்த நாள் விழாவில் ஆற்றிய தலைமை உரை)
தலையாய பணி
பல்கலைக் கழகத்தின் தலையாய பணி அறிவாற்றலைப்
பெற விரும்புவோர்க்கு, அதனை அதன் உண்மையான
அளவிலும், நோக்கத்திலும் அளிப்பதும், உலகின்
கருத்துக்கள், குறிக்கோள்கள் ஆகியவற்றின்
தனியாண்மையினைக் காப்பதும் ஆகும்.
பெற விரும்புவோர்க்கு, அதனை அதன் உண்மையான
அளவிலும், நோக்கத்திலும் அளிப்பதும், உலகின்
கருத்துக்கள், குறிக்கோள்கள் ஆகியவற்றின்
தனியாண்மையினைக் காப்பதும் ஆகும்.
— பேரறிஞர் அண்ணா