பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 மாநில அரசுகளிடமிருந்து வரி வசூலிப்பதை மத்திய அரசு பிடுங்கிக் கொள்ளும் போக்கு ஒரே அரசியல் கட்சி எல்லா இடங்களிலும் ஆண்டபோது சரியானதாக இருக்கலாம். இப்பொழுது பல கட்சிகள் வெவ்வேறு மாநிலங்களில் ஆளுவதால், அக்கருத்துச் சரியானதாக இருக்காது. சிலர் "யார் வரி வசூலித்தால் என்ன? அந்தப் பணம் இந்தியாவுக்குள்தானே இருக்கிறது?" என்று விசித்திர வாதம் புரிகிறார்கள். அப்படிப்பட்ட வாதத்திற்கு முன்பு கைத்தட்டல் கிடைத்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் காலத்திற்குச் சொல்லி வைத்துத்தான் கைதட்டல் பெற முடியும். இன்னுஞ் சில ஆண்டுகள் சென்ற பிறகு, சொல்லி வைத்தாலும் கைத்தட்ட மாட்டார்கள். அதன் பின்னும் மேலுஞ் சில ஆண்டுகள் சென்றால் கைத்தட்டுபவர்களையே சந்தேகிப்பார்கள். "திருநெல்வேலியில் களவாடியது திருச்செந்தூரில் இருக்கலாம். திருச்செந்தூரில் களவாடியது திருவல்லிக்கேணியில் இருக்கலாம். களவாடப் பட்ட பொருள்கூட, இந்த நாட்டிலேதான் இருக்கிறது. ஆகவே, களவாடப்பட்டது பற்றிக்கவலைப்படவேண்டாம்” என்று எவரும் கூறத் துணியமாட்டார்கள். ஒருவருக்குரிய பொருளை எடுத்தாலும் ஒருவருக்குரிய உரிமையை எடுத்துக் கொண்டாலும், திருட்டு திருட்டுதான். ஆகையால், உரிமைகளை மதித்து