பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40-

நாட்டின் ஒருமைப்பாட்டைப் பற்றிய பேச்சு அடிபடுவதற்கு முன்பே, மறைந்த டாக்டர் சி. பி. இராமசாமி அவர்கள், 'வடக்கே ஒடும் ஆறுகளான கங்கை, யமுனை ஆகியவற்றைத் தெற்கே உள்ள ஆறுகளுடன் இணைக்க வேண்டும்” என்று வற்புறுத்தி ஆறுகளின் இணைப்பு ஒருமைப் பாட்டை வலியுறுத்தினர்கள். ஆல்ை, அந்தக் கருத்து நிறைவேற்றப்படவில்லை. அதை ஏற்றுக் கொண்டிருந்தால், இப்பொழுது வடக்கே உள்ள ஆறுகளில் அங்கே ஏற்படும் வெள்ளங்கள் தடுக் கப்பட்டிருக்கும்.
நாட்டின் ஒரு பகுதி வெள்ளத்துக்கு ஆளா கியும் இன்னுெரு பகுதி தாழ்ந்தும் இருப்பது ஒருமைப்பாட்டை உருவாக்கிவிடாது. புராண காலத்திலே கூட, மத அடிப்படையில் காசியி லிருந்து காஞ்சி வரை ஒருமைப்பாடு பற்றிப் பேசப் பட்டது. நாட்டில் உள்ள நிதி நிலைமை, மூலப் பொருள், தொழில் நுட்ப அறிவு முதலியன ஒருங் கிணேந்து ஏற்படும் ஒருமைப்பாடே உண்மையான தாக இருக்கமுடியும். இல்லாவிடில், ஒருமைப் பாடு ஏட்டளவில் உள்ளதாகவே அமையும்.
இங்கு அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் தொழிற் சாலை, அமெரிக்காவின் கூட்டுடன் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தத் தொழில் மேலும் வளர்ச்சிபெற வேண்டும். இதன் சேய்த்தொழில்கள் பல உருவாக வேண்டுமென்னும் நல்லெண்ணத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.