42
போடுகின்றேன். தமிழக அரசுக்கு இருக்கும் தொல்லைகள் அகன்றதும், திரைப்படத் தொழிலை வாட்டும் வரிகளைக் குறைப்போம். திரைப்படத் தொழிலின் குறைகளை நான் மிகவும் நன்றாக அறிந்தவன்.
தமிழ்த் திரைப்படங்களுக்கு மாநில அரசு பரிசு கொடுத்துப் பாராட்ட வேண்டும் என்று கூறப்படுகிறது. அதைச் சுணக்கம் இல்லாமல் செய்வோம். ஆனால், அப்படிப் பரிசு பெற்ற படங்களுக்கு இப்போது வரி விலக்கு அளிக்க முடியாது.
மகாபலிபுரத்தில் படம் எடுக்க ஏராளமான பணம் வசூலிக்கப்படுகிறது. அந்த உரிமை மைய அரசிடம் உள்ளது. அது தமிழக அரசுக்குக் கிடைத்தால், கட்டணத்தை திண்ணமாகக் குறைப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
தணிக்கைக் குழுவிற்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வெட்ட வேண்டியதை, வெட்டாமல் விடுகிறார்கள். வெட்டக் கூடாததை வெட்டித் தள்ளுகிறார்கள். இந்நிலை மாற வேண்டும்.
வரியைக் குறைப்பதால் மட்டும், திரைப்படத் தொழில் வளர்ந்து விடாது. பதினைந்தாயிரம், இருபதாயிரம் என்று படப்பிடிப்புக்குச் செலவழித்து விட்டு, நடிகர்களுக்காகக் காத்திருக்கிறார்கள். நடிகர்கள் வரவில்லை என்றால், செலவழித்த பணம் வீணாகிறது. இது போன்ற செலவுகளை எல்லாம் குறைக்க வேண்டும்,