பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை
தமிழ்ப் பேச்சுலகில் விடிவெள்ளியாகத் திகழ்ந்தது மட்டுமன்றி, அனைத்து வகையினரையும் ஈர்க்கும். வகையில் பேசிய ஒரே பேச்சாளர் பேரறிஞர் அண்ணா. கவின்மிகு கருத்துச் செறிவும் ஒன்றையொன்று விஞ்சும் பல வகை நயங்களும் கொண்டவை அவர்தம் பேச்சுகள். அவை தொகைவகை செய்து வெளியிடப் பெறச் சீரிய திட்டமிடப் பட்டுள்ளது.

இத்திட்டத்தில் அண்ணாவின் தலைமை உரைகள் என்னுந் தலைப்பில் இரண்டாம் நூல் இப்பொழுது வெளியிடப் பெறுகிறது. இதனைத் தொடர்ந்து பல நூல்கள் விரைவில் வெளிவரும்.
அண்ணா முதலமைச்சராகப் பணியாற்றிய காலை 26-2-67 முதல் 7-12-68 வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆற்றிய தலைமை உரைகள் 27. இவற்றுடன் 6-6-54 அன்று இன்பக் கனவு நாடக நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை ஆக 28 இவ்வரிசையில் இடம் பெறுகின்றன, இக்கால எல்லைக்கு முன் அண்ணா ஆற்றிய தலைமை உரைகள் அனைத்தும் திரட்டப்பெற்று உரிய காலத்தில் வெளியிடப்பெறும். இன்பக் கனவு தவிர, ஈராண்டுக்காலத் தலைமை உரைகள் இவற்றோடு முடி வடைகின்றன. ஒவ்வொரு பேச்சுக்கும் பொருளுக்கேற்பத் தகுந்த தலைப்பு அளிக்கப்பெற்றுள்ளது.
இறுதியாக. இத்தமிழ் வெளியீட்டுத் திட்டம் வெற்றி பெற, அண்ணாவின் அன்பர்களும் வாசகர்களும் தங்கள் நல்லாதரவினை நல்கப் பணிவன்புடன் வேண்டுகிறேன். இது தஞ்சை அண்ணா பேரவைச் சார்பாக வெளிவருவது மகிழ்ச்சிக்குரிய செய்தி. அரிய அணிந்துரை வழங்கிய எங்கள் அன்புக்குரிய மருத்துவர் சி.என்.ஏ. பரிமளம் அவர்களுக்கும் உளங்கனிந்த நன்றி.

"காலத்தி ற்ைசெய்த நன்றி  சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது", 

தஞ்சாவூர், அ. கி. மூர்த்தி.

1–8–95.