பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



15. நேரிய நிதி உதவி

————

இந்த நிதியை வழங்கிய நல்ல உள்ளங்களுக்கு என் நன்றி. இன்னலை உணரக்கக்கூடியவர்கள் நீங்கள். அதனால், பழுத்த மரத்திடம் பழம் தேடிச் செல்வதுபோல், உங்களிடம் வந்திருக்கிறேன்.

தமிழகத்தில் நல்ல திருப்பம் ஏற்பட்டுள்ளது. நான் ஏதோ அரசியல் திருப்பத்தைக் குறிப்பிடுவதாக நண்பர் செங்கல்வராயன்* எண்ணத் தேவையில்லை. நிதியுதவி ரூ. 5 இலட்சம் அளவுக்கு எட்டியுள்ளது. ஆண்டுக்கு ஒரு கோடி அளவுக்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி சேர்த்துச் சென்னை நகரக் குடிசை வாழ் மக்களுக்குப் புதிய குடியிருப்புக்களைக் கட்டித்தர நாம் வகை செய்வோம்.

மக்கள் எத்தனை ஆண்டுகள் எங்களை ஆட்சியில் அமர்த்துகிறார்களோ, அத்தனை ஆண்டுகளும் இவ்வாறு நிதி திரட்டி இத்தொண்டைச் செய்வோம்.

ஒளவையாரால் பாடப்பட்ட பாரி மன்னன் போன்ற வள்ளல்கள் வாழ்ந்த நாடு இது. ஆட்சி இழந்த பின், பாரியின் பெண்டிர் இருவர் மலையொன்றில் வாழ்ந்தனர். ஒளவையார் அவர்களைக் காணச்சென்றபோது, அவருக்குக் கொடுக்க அவர்களிடம் புதுச்சேலைகள் இல்லை. தாங்கள் அணிகிற நீலச் சிற்றாடையை எடுத்து ஒளவையாருக்கு வழங்கினர். நீங்கள் அளித்துள்ள நன்கொடை அந்த நீலச் சிற்றாடைக்கு ஒப்பானத


  • அன்னாவின் நெடுங்காலக் காங்கிரஸ் நண்பர்.