55
சிங்காரச் சென்னை நகரிலே, 600க்கும் மேற்பட்ட குடிசைப் பகுதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும், 800 குடிசைகள் என்னும் அளவுக்கு உள்ளன. புதிதாகக் குடிசைகள் தோன்றாதிருக்க, அரசியல் கட்சிகள் தங்களுக்குள் கண்ணியமான ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். புதிய குடிசைப் பகுதிகள் ஏற்படாதிருக்க, ஆட்சியிலுள்ளவர்கள் சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் போது, ஆட்சியில் இல்லாத கட்சியினர் அதற்கெதிராக வாதாடுகிற நிலைமை இருக்கக் கூடாது. எனவே, கட்சிகள் கூடித் தங்களுக்குள் இது குறித்து ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும்.
வகைப்பாடு:: சமுதாயத் தொண்டு—வள்ளன்மை
(5-9-67 அன்று சென்னையில் நடந்த தீ விபத்துத் துயர் துடைப்புச் சீரமைப்பு நிதியளிப்பு விழாவில் ஆற்றிய தலைமை உரை.)
16. பன்மொழிப் புலவர்
பன்மொழிப் புலவர் அப்பாதுரை அவர்களின் மணிவிழாவிலே கலந்து கொள்வதிலே நான் மிகுந்த உற்சாகமடைவதற்கும், இதனை ஒரு நல்வாய்ப்பாகக் கருதுவதற்கும் காரணம், பல ஆண்டுகளாக