பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



55

சிங்கராச் சென்னை நகரிலே 600க்கு மேற்பட்ட குடிசைப் பகுதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 800 குடிசைகள் என்னும் அளவுக்கு உள்ளன. புதிதாகக் குடிசைகள் தோன்றாதிருக்க, அரசியல் கட்சிகள் தங்களுக்குள் கண்ணியமான ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டும். புதிய குடிசைப் பகுதி கள் ஏற்படாதிருக்க, ஆட்சியிலுள்ளவர்கள் சட்ட நடவடிக்கைகளே எடுக்கும்போது, ஆட்சியில் இல்லாத கட்சியினர் அதற்கெதிராக வாதாடுகிற நிலைமை இருக்கக் கூடாது. எனவே, கட்சிகள் கூடித் தங்களுக்குள் இது குறித்து ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டும்.

வகைப்பாடு : சமுதாயத்தொண்டு-வள்ளன்மை

5-9-67 அன்று சென்னையில் நடந்த தீ விபத்துத் துயர் துடைப்புச் சீரமைப்பு நிதியளிப்பு விழாவில் ஆற்றிய தலைமை உரை.

————

16. பன்மொழிப் புலவர்

————

பன்மொழிப் புலவர் அப்பாதுரை அவர்களின் மணிவிழாவிலே கலந்துகொள்வதிலே நான் மிகுந்த உற்சாகமடைவதற்கும், இதனை ஒரு நல் வாய்ப்பாகக் கருதுவதற்கும் காரணம், பல ஆண்டுகளாக