உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

நண்பர் செங்கல்வராயன் சொன்னது போல, ஆங்காங்கே சில தவறுகள், குறைகள் உண்டென்றால், அது மது விலக்கின் தோல்வியல்ல. மது விலக்கில், மனிதன் அடைந்த தோல்வியாகும்.

நான் சிறுவனாக இருந்த போது, நடந்தது இது. இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. என் உறவினர் இருவர் குடிப்பழக்கங் கொண்டவர்கள். ஒருவர் நன்றாகக் குடித்து விட்டுத் தெருவையே அதிர வைப்பார். அடிபடுவார், அடி கொடுப்பார். இன்னொருவர் குடிப்பழக்கங் கொண்டவர்தான். ஆனால், இவரோ வேறு வகையானவர். குடித்தவுடன் வீட்டுக்குள் வருவார். வீட்டில் மனைவியை அதிர வைப்பார், அடிப்பார், அழ வைப்பார். அவர் வெளியே நடத்துவதை இவர் உள்ளே நடத்துவார். இதில் உச்ச கட்டம் என்னவென்றால், இவர் அவரை அழைத்து அறிவுரை கூறுவதுதான், “என்னப்பா! குடித்து விட்டு வெளியே போய்ச் சண்டை போடுகிறாய். சமர் கட்டுகிறாய்? வீடு இல்லையா அதற்கு? உள்ளே வா,” என்று அதட்டுவார்.

இங்கே வீற்றிருக்கும் உங்கள் முன், உங்கள் மூலமாக அனைவருக்குஞ் சொல்லிக் கொள்வேன்.

“இந்தச் சம்பவம் என் மனத்திரையிலிருந்து மறையாது இருக்கும் வரை, நான் கேட்ட ஒலி என் காதுகளில் அலை மோதிக் கொண்டு இருக்கும் வரையில், இங்கே ஒரு மதுபானக் கடைகூடத் திறக்கப்பட மாட்டது என்று.

{{rh|[[gap}}F-9}}