உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

இந்தித் திணிப்புக்குக் காணப்படும் எதிர்ப்பு, மொழி ஏகாதிபத்தியத்தின் திமிரைப் பெருமளவுக்கு ஆட்டங்காண வைத்திருக்கிறது.

ஆங்கிலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மொழி என்றல்லாமல், உலக மொழியாயிருப்பதாலேயே, அதை நான் ஆதரிக்கிறேன்.

ஆங்கிலத்தைத் தீவிரமாக எதிர்த்து வந்தவர்கள் கூட, இப்போது அதனைப் புறக்கணித்து விட முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்.

நாட்டின் ஒற்றுமை ஒரு குறிப்பிட்ட மொழியையோ, “எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருந்தாக வேண்டும்” என்னும் நிலையையோ பொறுத்ததல்ல. மாறாக, உணர்ச்சியைப் பொறுத்ததாகும்.

ஆங்கில மொழி எந்த ஒரு நாட்டுக்கும் சொந்தமானதாக இன்றில்லை. இரண்டாவது உலகப் போரின் போது, மாவீரர் சர்ச்சில், “ஆங்கிலம் பேசுகிற மக்களே ஒன்று படுங்கள்!” என்று அறைகூவல் விடுத்தார்.

அமெரிக்கா நாடு அப்போதுதான் போரில் இறங்கியது. அப்படி ஒன்று படுத்தும் ஆற்றல் ஆங்கிலத்துக்கு உண்டு.

உலகின் பல நாடுகளிலும், இன்று ஆங்கிலம் கட்டாயமாகச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. வேறு பல நாடுகளில் இரண்டாவது மொழியாக அது கற்றுத் தரப்படுகிறது.

சோவியத்து இரஷ்யாவில் கூட, ஆங்கிலம் சிறப்பு மொழியாகக் கற்பிக்கப்படுகிறது.