உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

பிற மொழியினர் மீது இந்தி திணிக்கப்படுவதை உறுதியோடு எதிர்த்து வருகிறோம்; தொடர்ந்து எதிர்ப்போம். இந்தித் திணிப்பு கை விடப்படும் வரை எதிர்ப்போம்.

வகைப்பாடு : அரசியல்—மொழிக் கொள்கை
(25-10-67 அன்று சென்னையில் ஆங்கிலோ—இந்தியர் சங்கத்தின் 88 ஆவது ஆண்டு விழாவிற்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை.)



19. கலையும் அரசியலும்


இங்குப் பேசிய ஜெமினி வாசன் அவர்கள் இரண்டு கருத்துக்கள் பற்றிக் குறிப்பிட்டார்கள். அவை சிந்தித்துப் பார்க்கத் தக்கவை. முதல் கருத்து, நமது நாட்டு ஜனநாயகத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். அதற்கு, அனைவரும் குறிப்பாகத் தலைவர்கள் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது. இரண்டாவது கருத்து, திரைப்படத்தின் மூலம் நாட்டு மக்களிடம் நல்ல கருத்துக்களைப் பரப்ப இப்போது இருப்பதை விட, நல்ல முயற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது.

திரைப்படத்தின் மூலம் இன்னும் எவ்வளவோ நல்ல கருத்துக்களைப் புகுத்த முடியும். ஆனால், நினைக்கிறபடிப் புகுத்த முடியாத நிலையில் இருக்-