உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

அப்படி மக்களிடம் ஏதாவது குறையிருந்தால், திருத்தி விடலாம். ஆனால், தலைவர்கள் தாங்களாகத் திருந்தினாலொழிய, அவர்களைத் திருத்துவதற்கு வழியில்லை! அந்தத் தலைவர்களைத் திருத்துவதற்குத்தான், மக்கள் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை முயற்சி எடுக்கிறார்கள், தேர்தலின் மூலம்! ஆனால், அந்தத் தலைவர்கள், ஒரு முறை மக்கள் தந்த பாடத்தின் மூலம் திருந்துவார்களா அல்லது இரண்டு முறை பாடம் புகட்டினால்தான் திருந்துவார்களா என்பது தெரியவில்லை.

மக்களிடம் பாடம் பெற்றும் திருந்தாத தலைவர்கள் யார் என்று நாம் கூறத் தேவையில்லை. ஜனநாயகத் திறனுள்ள தலைவர்கள். அவ்வளவுதான்! அந்தத் தலைவர்கள் மக்களின் தீர்ப்பை உணர்ந்து நடக்கத் தொடங்கினால், ஜனநாயகம் இன்னும் ஒளியுடன் விளங்கும்! நண்பர் வாசன் அவர்கள் தென் சென்னைத் தேர்தலில் தமது ஓட்டைக் காங்கிரஸ் வேட்பாளருக்குப் போட்டதாகக் கூறினார். இதை வெளிப்படையாகக் கூறி விட்டு, வெற்றி பெற்ற மாறனையும் பாராட்டினார்.

இது, ஜனநாயத்தில் கருத்து வேறுபாடு இருக்கலாம். அதே நேரத்தில், கனிவுக்கும் இடமுண்டு என்பதை நிலை நாட்டும் பேச்சாகும். நண்பர் வாசன் அவர்கள் இப்படிக் கூறியதன் மூலம், காங்கிரஸ் வேட்பாளர் சி.ஆர்.இராமசாமி ஆறுதல் அடைவார் என்று நம்புகிறேன். ஒரே சமயத்தில்

F-10