பக்கம்:அண்ணா கண்ட தியாகராயர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

ஈடுபடுங்கள் என்று சொன்னாலும் சொல், கிளர்ச்சி செய்! இதை யாரும் தடுக்கமாட்டார்கள். உனக்கு தைரியமிருந்தால் எதையும் நியாயப்படி—முறைப்படி கேள். அதற்கு நாங்கள் பதில் சொல்லுகிறோம்.

எங்களுக்குப் பின்

இன்று இருப்பதிலே நாங்கள் தான் மிதவாதிகள். (Moderate) இது தெரியுமா உனக்கு? எங்களுக்குப்பின் இருப்பது புயல் ! அந்தப் புயலை நாங்கள் அடக்கி நேர்வழியில் செலுத்துகிறோம். எங்களைப் புறக்கணித்தால் எங்களுக்குப் பின்னால் வருவது பெரும் புயலாகத்தான் இருக்கும். ஆகவே பார்ப்பன அன்பர்கள் இந்தப் பழைய முறைகளை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

இங் பக்தி அங்கு அணுசக்தி

இந்த நாளிலே அணுசக்தியும் அதற்கு மேற்பட்ட புதிய சக்திகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அணுசக்தியிலிடுபட்ட கழிவுப் பொருள்களை எங்கே போட்டு வைப்பது என்று பார்த்துச் சந்திர மண்டலம் அதற்கு ஏற்றதா என ஆராய்ந்து வருகிறார்கள் மேனாட்டாசிரியர்கள். அவர்கள் சந்திர மண்டலத்தைத் தங்கள் குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஆனால் இங்கேயோ சந்திரன் ஆரணங்குகளுடன் லீலை பல புரிகிறான் என்ற கற்பனைக் கதைகள் கூறப்படுகின்றன. புதிய செய்திகள் தேடிக்கண்டு பிடிக்கப்பட்டு பக்தியாக்கப்பட்டு வருகின்றன. இந்த நாளிலே பத்திரிகையிலே விநோதமான செய்திகள் வருகின்றன

“துஷ்டர்களால் சுட்டெரிக்கப்பட்ட சபரிமலை அய்யப்பன் கோயிலின் கர்ப்பக்கிரகத்தில் புரோகிதர் சென்று நாசமடைந்து அலங்கோலமாகக் கிடந்தவற்றை எடுக்கையில் 12 அடி நீளமுள்ள பெரிய பாம்பு ஒன்று உடைந்து போன விக்கிரகத்தின் கீழ் படுத்துக்கொண்டிருந்தது. சுற்றியிருந்தவர்கள் அப்பாம்பைத் தாக்க கற்களை எடுத்-