பக்கம்:அண்ணா கண்ட தியாகராயர்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

முன்னுரை


அன்பின் நிறை உருவாம் டாக்டர் நடேசன், அறிவின் நிறை உருவாம் டாக்டர் டி. எம். நாயர் ஆகியவர்களிடையே செயலாற்றலின் நிறை உருவாய் நின்று திராவிடநாடு இயக்கத்தைத் தோற்றுவித்த பெரியார் ஸர்.பிட்டி. தியாகராயர். அவர்கண்ட கனா வெற்றி பெற்றுவரும் இந்நாளில், அவ்வெற்றி இயக்கத்தின் சிகரத்தில் நின்று அதன் தோற்ற வளர்ச்சிகளை அளந்து வருங்காலப் புத்தொளி கண்டு புதுக்கனாக் காணும் சிந்தனைக்கலைச் செல்வர் ஸி. என். அண்ணாத்துரை அவர்களின் சீரமைந்த கருத்துரை ஓவியமாக இச்சிறு நூல் திகழ்கிறது. தியாகராயரின் நினைவுநாட் சின்னமாகத் திராவிடநாட்டுத் தமிழர்க்கு களிப்பூட்டப்படும் இந் நன்முத்து வருங் காலத்தில் ஸர். பிட்டியின் புகழ் மணி மாலைகளுக்கும் நாட்டின் பிற நல்லறிஞர், நல்லியக்கங்களின் நிறைவாற்றல்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அவற்றின் ஒரு முனைமுகமாக விளங்குமாக.

—கா. அப்பாத்துரை.