பக்கம்:அண்ணா கண்ட தியாகராயர்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

பதிப்புரை


'வாழ்ந்து கெட்ட சமுதாயத்திற்கு ஒரு வழிகாட்டி; ஈராயிரம் ஆண்டுகளாக இருட்டறையில் வீழ்ந்து வெதும்பும் மக்கள் மன்றத்திற்கு ஒரு மணி விளக்கு; தாழ்வு மனப்பான்மையையும், அறிவின் அந்தகாரத்தையும் அகற்றவந்த அறிவுப் புரட்சி அண்ணல்; வாடிய திராவிட இனத்திற்கு வாழ்வு தரவந்த ஒரு ஞாயிறு' -இதுவே அண்ணா காணும் தியாகராயர் சின்னம்.

இதனை விளக்கித்தான் நீண்டதொரு அரிய சொற்பொழிவை அறிஞர் C. N. அண்ணாத்துரை M. A. அவர்கள் 30-6-50 அன்று திருவல்லிக்கேணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சர். பி. தியாகராயரின் நினைவுநாள் கூட்டத்தில் ஆற்றினார். அந்தச் சொற்பொழிவே இச்சிறு நூல் வடிவில் வெளியிடப் பெறுகிறது, எல்லோர்க்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தால்.

அந் நினைவு நான் /நாள்? கூட்டத் தலைவர் கா. அப்பாத்துரை M.A L.T. அவர்களே இதற்கு முன்னுரையும் எழுதித்தந்தது மகிழ்ச்சிக்குரியது.

சொற்பொழிவை எழுதி உதவிய அன்பர் அன்புப் பழம்நீ அவர்கட்கு எம் நன்றி,

பகுத்தறிவுப் பாசறையார்.