பக்கம்:அண்ணா கண்ட தியாகராயர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

அண்ணா கண்ட தியாகராயர்

 

அன்புள்ள தலைவர் அவர்களே, தோழர்களே,

சர். பி. தியாகராயர் திருநாளை இவ்வளவு சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்த தோழர்களுக்கு முதன் முதலிலே என்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இவ்வளவு இடைஞ்சலான இடத்திலே, இலட்சக் கணக்கான மக்கள், மறைந்த நம் மாவீரர் தியாகராயர் நினைவு நாளைக் கொண்டாடக் கூடியிருப்பதைக்கண்டு பூரிப்படைகிறேன். இந்த இடைஞ்சலான இடத்திலே நீங்கள் உட்கார்ந்து கொண்டு சர். பி. தியாகராயரின் நினைவு நாளைக் கொண்டாடுவதற்குக் காரணம் என்ன? அவர் பெயரைக் கேட்டவுடனேயே உங்கள் உள்ளத்தின் கண்ணே பெருமித உணர்ச்சி ஊடுருவிப் பாய்கிறது, வீழ்ச்சியுற்ற திராவிடத்திற்கு எழுச்சியூட்டி அதற்குப் புது உணர்ச்சி தந்த முதல் வீரர் அவர் என்ற காரணத்தால்!

நம்முடைய கட்சிச்சார்பாக நடைபெறும் கூட்டத்திற்கெல்லாம் சர்க்கார் ஒற்றர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை வரவேற்கிறோம். நம்மிடையே உள்ள சிறந்த உணர்ச்சியையும் சர்க்கார் ஒற்றர் அறிந்து செல்ல வேண்டும். அந்த நாளிலே சர். பி. தியாகராயர் ஏற்படுத்திய அறிவுப் புரட்சி இப்பொழுது எங்கும் பரவியிருக்கிறது. மக்களிடையே காணும் இந்த அறிவுப்புரட்சி எதிர் காலத்திலே சிறந்த பலனைத் தரும்.

அவர் விரும்பியிருந்தால்!

தியாகராயர் பெரிய செல்வந்தர்; பணம் படைத்தவர். தியாகராயர் விரும்பினால் வியாபாரத்தின் மூலம் பல