பக்கம்:அண்ணா கண்ட தியாகராயர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9


வருகிறோம். அன்று அவர் துணைக்கு டாக்டர் நாயர் கிடைத்தார். டாக்டர் நாயருடன் பார்ப்பனீயத்தை எதிர்க்க ஒரு நல்ல போர் முகாமை அன்று அவர் ஏற்படுத்திக் கொண்டார். பார்ப்பனீயம் என்றால் என்ன என்பதை அவர் மக்களுக்கு நன்கு எடுத்துரைத்தார். இதை நாம் இன்று நன்கறிகிறோம். பல ஆண்டுகளாக நாம் பார்ப்பனீயத்தை எதிர்த்து பல வெற்றிகளைக் கண்டிருக்கிறோம். இங்கு நாம் வெற்றிக் களிப்போடு கூடியிருக்கிறோம். ஆனால் நம் வெற்றிகளின் எதிரொலியாக எதிர்முகாமில் பரபரப்புக் காணப்படுகிறது. C. N. அண்ணாதுரை எந்த செக்ஷனிலே அகப்படுவான்? 153-லே அகப்படுவானா? எந்த சட்டப்பிரிவிலே அவனைப் பிடிக்கலாம் என்று தான் சர்க்கார் இருக்கிறார்கள். உண்மைபிலே இது நீதிப்படியல்ல. சர்க்காருக்கு ஏற்பட்டிருக்கும் பீதியாலேதான். சர்க்கார் நம்மைக்கண்டு மருளுவது பயத்தின் விளைவாகும். அன்று பார்ப்பனர் ஆதிக்கம் கண்டு பார்ப்பனரல்லாதார் அஞ்சினார்கள். இன்று அஞ்சுபவர் பார்ப்பனர்கள் தான். ஆனால் உண்மையில் அவர்கள் அஞ்சத் தேவையில்லை.

பார்ப்பனரை யல்ல-பார்ப்பனீயத்தை!

பார்ப்பன நண்பர்களே, பயப்படாதீர்கள் ! நாங்கள் உங்களுக்கு எதிரிகளல்ல! நாங்கள் எதிர்த்து வருவது பார்ப்பனீயத்தைத்தான். உங்களிடையே புகுந்த பார்ப்பனீயத்தைதான் நாங்கள் எதிர்க்கிறோம், எதிர்த்துக் கொண்டே நாங்கள் வளருகிறோம். இன்னும் வளர்ந்து கொண்டே செல்கிறோம். எங்கள் வளர்ச்சியைத் தடுக்காதே! தடை செய்யாதே ! எங்கெங்கு எங்கள் வளர்ச்சிக்குத் தடை செய்கிறாயோ, அங்கெல்லாம் உங்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். உம்மிடையே பல்லாண்டுகளாக நீக்கமுடியாமலிருக்கும் பார்ப்பனீயத்தை ஒழித்து செம்மிடையே புதிய உறவு ஏற்படுத்திக்கொள்ள விரும்பினால்