இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
112
புகுந்தனர் புரட்சி நடிகரும், கொள்கையில்
மிகுந்த விருப்புடன், உகந்தநே ரத்தில்!
அடக்கு முறைகளுக்கு அஞ்சி ஓடாமல்
வடக்கின் அமைச்சர் வரும்போ தெல்லாம்
கருப்புக் கொடிகளைக் காட்டி நமது
வெறுப்பினைப் பலகால் வெளிப்படுத்தினோம்!
சாலை யோரக் கல்லூரி போலவே
மாலை வகுப்புகள் நடத்தினார் அண்ணா!
"வெட்ட வெளிகளில் வீராப்புப் பேசுவோர்...
சட்ட மன்றம் நுழைந்திடத் தகுதியோ?”
என்றனர் முதல்வர் காம இராசரும்!
நன்று, அந்த வழியும் நாடுவோம் விரைவில்!
மக்கள் ஆணையை மதிப்போம்” என்றே
தக்க தருணம் பார்த்தனர் அண்ணனே!