இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
126
அண்ணாவே லூரில்; நா வலர்சென் னைக்குள்;
ஆயிரமாய்க் கலைஞருடன் திருச்சிக் குள்ளே!
கண்ணான பொற்செழியன்.மணியன் என்ற
காளையர்கள் இருவருமோ கல்ல றைக்குள்:
புண்ணான கழகத்தார் சிறைக்குள்! நையப்
புடைத்திட்ட கல்நெஞ்சர் கோட்டைக் குள்ளே!
மண்ணாளும் பேராசை படைத்த சீனன்
வஞ்சகமாய் இந்தியாவின் எல்லைக் குள்ளே!
பிரிவினையைப் பேசுவதே பெரிய குற்றம்;
பிடித்தடைப்போம் சிறைக்குள்ளே நீண்ட காலம்!
பிரிவினையைப் பேசுகின்ற கட்சி தன்னைப்
பெரியதொரு சட்டத்தால் தடையும் செய்வோம்!
பிரிவினையைப் பேசிடுவோர் தேர்தலுக்குள்
பிரவேசம் செய்வதையும் தடுப்போம்" என்று...
சரிவினையே நாடிநின்ற தேசி யத்தார்
சட்டமொன்றும் நிறைவேற்றி மிரட்ட லானார்!