பக்கம்:அண்ணா காவியம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

அண்ணா காவியம்


ஆலடி அரு ணா,சீனி வாசன், ஆற்றல்
அடலேறு காளிமுத்து, காம ராசன்,

நாலடியார் போல் கணேசன், கோபால் சாமி,
நாவளவன், துரைமுருகன், இரகு மான்கான்,

சீலமுடன் சனார்த்தனமும், இராம சாமி,
சீவாக லைமணி,ரா சாமு கம்மத்,

பாலமுதாஞ் சின்னா,ச தாசி வம்போல்
பற்பலரும் எழுச்சியுடன் இணைய லானார்!




கழகமிந்தப் போராட்டம் துவக்க வில்லை;
கலந்துகொண்டோர் மாணவரே! வியக்கும் வண்ணம்

அழகழகாய் அணிவகுத்து மறியல் செய்தார்!
ஆதிக்க இந்தியினை எதிர்ப்போம் என்று,

பழகுதமிழ்ச் சொல்பயின்றோர் எடுத்துச் சொல்லிப்,
பண்பாக ஊர்வலம்போய் முழக்க மிட்டார்!

முழநீள அரிவாளைக் கொண்டு வெட்டி,
முரடர்கள் கலவரத்தைத் தூண்டி விட்டார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/138&oldid=1079983" இலிருந்து மீள்விக்கப்பட்டது