பக்கம்:அண்ணா காவியம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முதல்வர்
147

உழைப்புக் கொடையை உவந்து நல்கிடப்

பிழைப்புத் தொழிலுக் கப்பால் பெரியதோர்

சீரணிப் படையைப் பேரறி வாளர்

சீருடன் துவக்கினார் ! செம்படை யென்றே

அஞ்சியோர் அய்யம் பஞ்சாய்ப் பறந்திட

விஞ்சிடும் தொண்டினால் மேவியது அப்படை!

குடிசை வாழ்வோர் அடிக்கடி தீயினால்

மடிவதும் குடிசை எரிவதும் தடுத்திடத்

தீப்பிடிக்காத சிக்கன வீடுகள்

ஏற்பாடு செய்து அவர் இடம்பெயர்த் தமர்த்தினார்!

பயமறி யாமல் சுயமரி யாதைத்

திருமணம் புரிந்து நறுமண வாழ்வில்

திளைத்திட உரிமை அளித்திடும் சட்டம்

இயற்றினார்; தந்தைநம் முயற்சிபா ராட்டினார்!

இமிழ்கடல் வேலித் தமிழகம் இதனை

முதிரா அறிவினர் மதரா சென்றனர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/149&oldid=1080016" இலிருந்து மீள்விக்கப்பட்டது