இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அமரிக்க அரசுதந்த அழைப்பின் பேரில்
அரியயேல் பல்கலைக் கழகத் துள்ளே
கமழறிவு மணம் வீசும் குறள்ப ரப்பிக்
கருதரிய கல்வியினால் சிறப்புப் பெற்றார்!
சமயமிது நழுவிடாமல் அய்ரோப் பாவின்
சால்புமிகு நாடுகட்கும் சென்று மீண்டார்!
இமயமுதல் குமரிவரை அண்ணா என்றால்
யாவருமே புகழ்ந்தேத்த உயர்ந்து நின்றார்!
ஊழியராய் அரசுதனில் பணிபுரிந்தால்
ஒய்வுபெறும் வயதினிலே ஆட்சி ஏறிக்...
கோழியும்தன் குஞ்சுகளைப் பேணுதல் போல் :குறைவின்றித் தம்பியரைப் பாது காத்து,
வாழியென வாழ்த்துவோரும், ஒழிக என்று
வைவோரும் உடன்பிறப்பே எனம தித்துப்...
பாழுடலின் நோய்பற்றிக் கவலை யின்றிப்
பாரத்தைச் சுமந்ததனால் நைந்தார் அண்ணன்!