பக்கம்:அண்ணா காவியம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

அண்ணா காவியம்


மறுபடியும் அமரிக்கா சென்ற போழ்தில்
மருத்துவராம் மில்லரிடம் சிகிச்சை பெற்றார்.

அறுபதாம் பிறந்தநாளில் திருச்சி-தஞ்சை
அண்ணனுக்குச் சிலையெடுத்த அதேநேரத்தில்...

அறுவையெல்லாம் நன்முறையில் முடிந்ததாக
அறிவித்தார் நம்கலைஞர்! களிப்பில் மூழ்கிப்

பொறுமையுடன் காத்திருந்தோம் வருகைக் காகப்...
பொல்லாங்கு தொடருமென அறிந்தோ மில்லை!




எண்பதாண்டு கடந்தவர்போல் அண்ணன் மீண்டார்! :ஏனென்று புரியவில்லை; வந்தால் போதும்...

கண்குளிரக் காண்பதொன்றே நிறைவ ளிக்கும்!
காலமெல்லாம் அவர் நிழலில் குளிர்ச்சி கண்டோம்.

மண்பெருமை நிலைப்பதற்கும், மாதா வுக்கு
மகனாற்றும் கடமையினை முடிப்பதற்கும்.

ஒண்புகழ்சேர் தமிழ்நாடென் றுரக்கக்கூவி
உடல்நிலையைக் கருதாமல் நிறைவு செய்தார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/154&oldid=1080029" இலிருந்து மீள்விக்கப்பட்டது