பக்கம்:அண்ணா காவியம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



புனிதனைத் தேடி
165

தீட்டா விடினும் வைரம் வைரமே;

மீட்டாப் போதினும் வீணை வீணையே!

எண்ணம் பேச்சுடன் இயைந்து செய்கை

கண்ணியம் குன்றிடா வண்ணமா யிருந்திட

வாய்மை உண்மை வற்றா நேர்மை

தூய்மை பொறுமை துணிவு கனிவு

தன்னைப் போலஅன் னியரை மதித்தல்

மென்மையும் வன்மையும் மேன்மையும் நன்மையும்

பெருக்கத்துப் பணிவும் சுருக்கத் துயர்வும்

தருக்கித் திரியாச் சால்பும் வேண்டும்!




விட்டுச் செய்திகள் வெளியில் விடாத

பூட்டுத் தேவை பொறுப்பினை உணர்த்திட!

ஈட்டியே பாயினும் வாட்டிடும் வன்முறை

தீட்டிய வாளாய்த் திடுமென வீழினும்

குலையா உறுதியும் உலையா மனமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/167&oldid=1080268" இலிருந்து மீள்விக்கப்பட்டது