இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
168
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்று நன்றுள்ளக் கெடுமென உரைத்தனர்!
மறதியால் வருவது மகத்தான இன்பம்,
மறதியில் லாவிடில் மனிதன் விலங்கினம்!
மன்னிப் பருளும் மனம்பெறும் அமைதி
என்னபே ரின்பம்? ஈடினை யற்றதாம்!
"ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போ
தாகூர் வரைந்த தகைகிறை கவிதையும்
"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்"
திருமூலர் சொன்ன திருமங் திரமும்
நமதண் ணன் அரும் சமதர்ம கெறியாய்
எளிதாய் வழங்கிய கழிபெருங் கொடையே!
இஃதே எமதரும் இலட்சிய மென்று
பல்லாற் றானும் பணியாற் றுதற்கே
நின்வழி நின்று நன்மை பெருக்கஇவ்
அரசினை அமைத்தோம்; விரைவாய்த் திட்டம்
நிறைவேற் றிடவும் நெறிமுறை வகுத்தோம்!