இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
169
அனைத்துல கெங்கும் நினைத்தும் பார்த்திடா
இனித்திடும் செயல்கள் எண்ணில் அடங்கா!
ஒன்றரைச் சானுள ஒலைக் குடிசை
சென்றது; மாடிச் செங்கற் கட்டடம்
வந்தது! உழுதிட நிலமும், சொந்தமாய்க்
குந்திட மனையும் கொடுத்ததுநம் அரசே!
மோழையும் கற்று முன்னணி செல்கிறான்!
ஏழை சிரிக்கிறான்; எவனோ எரிகிறான்!
"எதையும் தாங்கும் இதயம் வேண்டும்"
ஞானிபோல் அண்ணா ஏனிதைச் சொன்னாய்?
தேனினும் இனியவுன் தீஞ்சொல் கேட்டு
மிகுதியும் இன்பப் பகுதியில் வாழ்ந்தோம்!
தகுதியுள்ளோரை மிகமிக மேலே
ஏற்றி விட்டநல் ஏணியே! உன்னைப்
போற்றிப் புகழவோ போதாது நேரம்!