பக்கம்:அண்ணா காவியம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



புனிதனைத் தேடி
169

அனைத்துல கெங்கும் நினைத்தும் பார்த்திடா

இனித்திடும் செயல்கள் எண்ணில் அடங்கா!

ஒன்றரைச் சானுள ஒலைக் குடிசை

சென்றது; மாடிச் செங்கற் கட்டடம்

வந்தது! உழுதிட நிலமும், சொந்தமாய்க்

குந்திட மனையும் கொடுத்ததுநம் அரசே!

மோழையும் கற்று முன்னணி செல்கிறான்!

ஏழை சிரிக்கிறான்; எவனோ எரிகிறான்!

"எதையும் தாங்கும் இதயம் வேண்டும்"

ஞானிபோல் அண்ணா ஏனிதைச் சொன்னாய்?

தேனினும் இனியவுன் தீஞ்சொல் கேட்டு

மிகுதியும் இன்பப் பகுதியில் வாழ்ந்தோம்!

தகுதியுள்ளோரை மிகமிக மேலே

ஏற்றி விட்டநல் ஏணியே! உன்னைப்

போற்றிப் புகழவோ போதாது நேரம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/171&oldid=1080278" இலிருந்து மீள்விக்கப்பட்டது