இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
33
பெற்றெடுத்த தாயார்தான் பங்கா ரம்மாள்!
பேணிவளர்த் துருவாக்கிக் கொணர்ந்த தெல்லாம்
சிற்றன்னை என்றபொருள் உடைய தொத்தா
சீர்ராசா மணியம்மை யார்தான் என்க!
மற்றவரை விடச் சற்றுக் குள்ள மான
மகனையுச்சி மோந்தெடுத்துத் தழுவிக் கொண்டு
கொற்றவனுக் கேற்ப, அண்ணா துரையென்னும்பேர்
குதுரகலமாய்ச் சூட்டினரே, குலம்வி ளங்க!
வீசுபுகழ் அண்ணணென அழைப்ப தற்கோ
வெகுதிறமாய்ப் பெயரிட்டார் தகுதி யோடும்?
ஏசுபிரான் அவதரித்த காலத் தைத்தான்
இவ்வுலகின் பொதுக்கணக்காய் எண்ணு
கின்றே
மாசுமில்லை; மயக்கமில்லை; வந்த ஆண்டே
மறுபடியும் வரத்தக்க குறையு மில்லை!
ஆசிரியர் வரலாற்றை வரையும் காலம்
ஆயிரத்தொள் ளாயிரத் தொன்பான் ஆண்ட
அ.-2 -