இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
43
பள்ளியிலே தனித்திறமை காட்டா வண்ணம்
பயின்றுவிட்டார் காஞ்சியிலே எனினும், அண்ணா
கள்ளமிலாக் கல்லூரி நுழைவின் பின்னர்க்
கங்குகரை காணாது கற்க லானார்!
வெள்ளமிக அணையுடைத்தே விரைந்தாற் போல
வேகமுடன் அறிவாற்றல் உணர்த்தி வந்தார்!
எள்ளளவும் நேரத்தை வீணாக் காமல்
ஏடுகளை மூளையினால் விழுங்க லுற்றார்!