பக்கம்:அண்ணா காவியம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மணம் புனை காதை
47

குடத்திட்ட விளக்காகத் தனைம றைத்துக்
கொண்டுவந்த அண்ணாவோ, பொருளாதாரம்

நடத்திட்ட சிறப்பான மேல் வகுப் பில்...
நல்லெண்ணம் நிறைந்திட்ட முதல்வர் கூறி

இடத்திற்கும் ஏற்பாடு செய்த தாலே
இடையூறு வாராமல் படிக்க லானார்!

கெடத்தெரியா இயல்பினராய் இருந்த அண்ணா :கிஞ்சிற்றும் அஞ்சாமல் யாவும் கற்றார்.



கட்டுரைகள் எழுதுவதில் ஆசான் கூடக்
கலக்கமுறும் வண்ணமாக விளக்கந் தந்தும்,

எட்டுணையும் யாராலும் இயலா தாக
ஈடற்ற திறமையினைக் காட்டு மாறும்,

தொட்டுவந்த அண்ணாவின் கூர்மை கண்டு
சொல்லவொணா மகிழ்வுற்றார் அனைவ ருந்தான்!

விட்டுவைத்த துழைபுலமோ ஒன்று மில்லை;
மிகுதியான பேரறிவை வெளிக்கொணர்ந்தார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/49&oldid=1078684" இலிருந்து மீள்விக்கப்பட்டது