பக்கம்:அண்ணா காவியம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அண்ணா காவியம்

48

பட்டிமன்றக் கூட்டங்கள் நடக்குந் தோறும்
பங்குபெற்றார் அண்ணாவும் தவறி டாமல்!

அட்டியின்றிக் கலந்து கொண்டு, வாதம் செய்தே
அடுத்தவரை மடக்குவதில் நிகரே இல்லை!

முட்டிவரும் எதிர்கட்சிப் பேச்சா ளர்க்கு
மூச்சுவிடத் திணறுமாறு சொல்ல டுக்கி,

எட்டிநின்ற யாவரையும் தம்பால் ஈர்க்கும்
இணையற்ற சொன்மாரி பொழிந்து வந்தார்.



பச்சையப்பன் கல்லூரி பெருமை யாலே
பளபளக்கச் செய்திட்டார் அண்ணா அந்நாள்!

இச்சையுடன் தாம்விரும்பும் முற்போக் கான
எழிற்கொள்கை வழங்கிடவே முனைந்து நின்றார்!

கொச்சையான ஆங்கிலமும் தமிழும் சேர்த்துக்
குழறிடுவார் மத்தியிலே, இனிமை யான

மொச்சைவிதை போன்றதமிழ்ச் சொற்கள் வீசி,
முழுமையான ஆங்கிலமும் பேசி வந்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/50&oldid=1078690" இலிருந்து மீள்விக்கப்பட்டது