பக்கம்:அண்ணா காவியம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அய்யா ஆட்கொண்ட படலம்


பிற்படுத்தப் பட்டகுலப் பிறப்பால் அண்ணா
பின்னடைந்தோர் முன்னேற்றம் கருத்தில் கொள்ள

முற்பட்டார்! அதற்கேற்ப நீதிக் கட்சி
முகிழ்த்திருந்து கொடிகட்டி ஆண்ட நேரம்

கற்பதுடன் பொதுநலமும் நாடும் நெஞ்சால்
காலத்தை அத்துறையில் செலவு செய்தார்.

அற்பமென இகழ்ந்திட்ட தொழிலா ளர்பால்
அகலாத பற்றுவைத்தார்; அக்கா லத்தே!



தொழிலாளர் தலைவரான வாசு தேவர்
தூயநறுந் தொண்டாற்றிச் செல்வாக் காலே

அழியாத புகழ்படைத்து நீதிக் கட்சி
அரணாகச் சென்னைநகர்த் தந்தை யாகப்...

பழியாதும் இல்லாது பதவி யேற்றார்.
படித்துவந்த அண்ணாஅப் பண்புள் ளாரை

வழிகாட்டி யாய்க்கொண்டு தொழிற்சங் கத்தில்
மனமார ஈடுபட்டார்; பணிபுரிந்தார்.

அ.-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/51&oldid=1078704" இலிருந்து மீள்விக்கப்பட்டது