இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
50
நாயருடன் தியாகராயர், பனகல் மன்னர்...
நாட்டினிலே பெரும்பான்மை யான மக்கள்,
தூயதமிழ்க் குடிப்பிறந்தார்; சொந்த மண்ணில்
தொடர்பாகக் காலமெலாம் வாழ்ந்து வந்தும்
ஆயநலம் அத் தனைக்கும் வாய்ப்பில் லாமல்
அருங்கல்வி, அலுவல்கள், வணிகம், மற்றும்
தாயகத்தில் மேம்பாடு யாவும் இன்றித்
தரங்குறைந்து வலிவுகெட்டு நவிந் திருக்க...
யார்யாரோ மண்ணுக்குச் சொந்த மில்லார்
யாவற்றி லும்மிகவும் முன்னே நின்று
சீர்பெற்று வளமாக வாழ்தல் கண்டு,
சிந்தித்துப் பலகாலம் நொந்த நெஞ்சால்
ஊர்மக்கள் நன்மைக்கு நீதிக் கட்சி
உண்டாக்கித் தொண்டாற்ற முன்வந் தார்கள்!
பேர்பெற்ற பெரியாரும் இடையில் வந்து
பெரும்பங்கு கொள்வதற்குத் துணிய லானார்!