பக்கம்:அண்ணா காவியம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அய்யா ஆட்கொண்ட படலம்

51


பெரும்பாலும் படித்தவரே இருந்த தாலும்,
பேசுவதும் ஆங்கிலமே என்பதாலும்,

விரும்பிவந்து மக்களனி இதிலே சேர
வெகுகாலம் ஆகியும் நல் வாய்ப்பே இல்லை!

அரும்பாகி மலராமல் நின்ற நேரம்
அய்யாநம் பெரியாரும் தொடர்பு கொள்ளத்,

திரும்பினரே அண்ணாவும் இந்தப் பக்கம்;
திருப்புமுனை கண்டதந்த நீதிக் கட்சி!

ஆசிரியத் தொழிலினிலும் சிறிது காலம்
அமர்ந்திருந்து பணிபுரிந்து பார்த்தார் அண்ணா:

மாசிலாத அலுவலுமே நிறை வளிக்க
மறுத்ததனால், மனம் ஏற்ற வண்ண மாகக்

காசின்றி அரசியலில் காலை வைத்தார்!
கண்வைத்த பெருந்தனத்தார், தம்மை ஈர்க்க

வீசிவிட்ட வலையினிலும் வீழ வில்லை!
வீரமிக விருப்பம்போல் ஈடு பட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/53&oldid=1080324" இலிருந்து மீள்விக்கப்பட்டது