இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
53
நூற்றுக்கு மூன்றுபேரா யிருந்த வர்கள்
- நுடங்காமல் மேல்வாழ்வை அமைத்துக் கொண்டு,
சோற்றுக்கும் திண்டாட விட்டு விட்டார்:
- சொந்தநாட்டுப் பெரும்பான்மை மக்கள் கூட்டம்
ஏற்றுக்கொண் டின்னலிலே உழன்று வந்தார்;
- ஏமாற்றுக் காரரிங்கே பிழைத்து நின்றார்!
மாற்றிவிடத் துணிவின்றி மலைத்தி ருந்த
- மாக்கொடுமை தனைத்தவிர்க்கப் பெரியார் வந்தார்!
முரண்பட்ட புதுக்கருத்தை வெளிப்படுத்தி,
- மூடமதிப் பழங்கொள்கை யாவும் தாக்கி,
அரண்செய்த சாத்திரங்கள், சம்பிர தாயம்,
- ஆண்டவனின் கட்டளைகள் எல்லாம் வீணாய்ப்
பரண்மீது தூக்கியெறிந் தகற்றி விட்டுப்,
- பைந்தமிழர் விழித்தெழவே வழிகள் கூறிச்,
சரண்அடையும் பிற்போக்குக் கொள்கை சாடிச்
- சன்மார்க்கம் தந்தைவழி உரைத்தார் அண்ணா!