இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
64
நாட்டோரும் சிந்திக்கத் தொடங்கி விட்டார்;
- நாயகனாம் பெரியாரின் கொள்கை தம்மைக்
கேட்டாரைப் பிணிக்கின்ற சொல்லால் கூறிக்
- கேளாரும் படிக்கின்ற முறையில் நன்கு
தீட்டிவந்தார் அண்ணாவும்! திசைபு ரிந்து
- திராவிடர்நாம் என்பதெல்லாம் உணர்ந்த தாலே
போட்டியிட்டு முன்வந்தார் இளைஞர் கூட்டம்
- பொங்கிவந்தார் பெருவெள்ளம் போல அன்றே!