பக்கம்:அண்ணா காவியம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

அண்ணா காவியம்

நாட்டோரும் சிந்திக்கத் தொடங்கி விட்டார்;

நாயகனாம் பெரியாரின் கொள்கை தம்மைக்

கேட்டாரைப் பிணிக்கின்ற சொல்லால் கூறிக்

கேளாரும் படிக்கின்ற முறையில் நன்கு

தீட்டிவந்தார் அண்ணாவும்! திசைபு ரிந்து

திராவிடர்நாம் என்பதெல்லாம் உணர்ந்த தாலே

போட்டியிட்டு முன்வந்தார் இளைஞர் கூட்டம்

பொங்கிவந்தார் பெருவெள்ளம் போல அன்றே!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/66&oldid=1078992" இலிருந்து மீள்விக்கப்பட்டது