பக்கம்:அண்ணா காவியம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

அண்ணா காவியம்


சேலத்துத் தீர்மானம் செய்த மாற்றம்
சிறப்பாக இளையோரை ஈர்த்த தாலே...

காலத்தின் தீவிரத்தைப் புரிந்து கொண்டோர்
கருத்துமிக்க கழகத்தில் தொண்டர் ஆனார்.

ஓலத்தால் தமிழ்ச்சிறப்பை அடக்கப் பார்த்த
ஒய்யார புரியினர்க்கும் உணர்த்தும் கொள்கைப்

பாலத்தைப்-பத்திரிகைப் பணியை- அன்றே
பக்குவமாய்த் துவக்கினார் நம் ஆரூர்த் தம்பி!




அடுத்தாண்டு திருச்சியிலே புத்தூ ரின்கண்
அருமையாகத் திராவிடர் கழகச் சார்பில்

எடுத்திட்ட சிறப்புமா நிலமா நாட்டில்...
ஏந்தல்நம் அண்ணா, நல் அழகர் சாமி

தொடுத்துரைத்த விளக்கத்தால் மேலும் மேலும்
தொகுப்பாகத் திராவிடநா டென்னும் வேட்கை

படுத்திட்ட தமிழர்க்கும் தென்புண் டாக்கப்

பாரெல்லாம். நம்புக்கம் பார்த்த தேகாண்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/78&oldid=1079253" இலிருந்து மீள்விக்கப்பட்டது