இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
79
மேடையிலே மூன்றுமணி நேரம் நின்று,
மெல்லமெல்லக் குதிகாலை உயர்த்திக், கையின்
சாடையிலே விழியோட்டிச் சுழன்று, சப்த
சங்கீதச் சாரீரச் சுருதி கூட்டித்,
தோடியிலே ராசரத்னம் நாய னம்போல்...
தொடர்ந்துவிழும் சொற்கோவை இசையாய்ப்
பொங்க
ஆடையினால் வியர்வையினைத் துடைத்தவாறே...
அரைநொடிக்குள் பொடி உறிஞ்சிப் பேசும் போதில்
கேட்டாரின் மனக் கதவைத் தட்டி, உள்ளே
கிளுகிளுக்குந் தென்றலெனக் கருத்து வீச,
வாட்டுகின்ற மூளையிலே உழுது, மெல்ல
மறுமலர்ச்சி வித்துான்றச் செய்வார்! என்றும்
ஏட்டளவுக் கல்வியில்லா ஏழை மாந்தர்
எதற்காக? எப்படி? ஏன்? என்று கேள்வி
கேட்டறியத் தூண்டிவிட்ட தலைவர்! போலிக்
கிளர்ச்சிகளால் வளர்ச்சிபெற்ற தலைவ ரல்லர்!