பக்கம்:அண்ணா காவியம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கூத்தாடிய படலம்
87


அஞ் சாமல் தந்தையுடன் அண்ணா மற்றும்

அருந்தொண்டர் அனைவருமே சமாளித் தாலும்,

எஞ்சாமல் தாய்மார்கள் மருண்டே ஒட

இழிகுணத்தார் துரத்தினார்கள்! இன்றவ ர்கள்

நெஞ்சினிலே கைவைத்து நினைக்க வேண்டும்;

நிலைமையென்ன? இன்றந்த மதுரை முற்றும்

விஞ்சுபுகழ்க் கழகத்தார்: எதிர்த்தோர் எங்கே?

வினைவிதைத்தோர் வினையறுத்துப் போனார் அந்தோ!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/89&oldid=1079509" இலிருந்து மீள்விக்கப்பட்டது