இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
"மாடுகளும் வழக்கத்தால் செக்கைச் சுற்றும்
- மடையர்களும் இயற்றிடுவார் கடவுட் பாடல்!"
ஏடுகளில் படித்ததுண்டா இதுபோல் முன்னர்?
- இயம்பியவர் பாரதிதா சன்ந மக்குச்
சூடுவரச், சொரணை பெற, மானம், வெட்கம்,
- சுயமரியா தையுணர்ச்சி தோன்ற-அந்நாள்
வீடுகளில் புரட்சிவிளக் கேற்றி வைத்து
- வெளிச்சத்தைக் காட்டியவர் கவிஞர் தாமே?
அக்கவிஞர் நம்பக்கம் இருப்பு தென்றால்...
- அறிவுலகம் செய்தபெரும் பேறே அன்றோ?
தக்கவண்ணம் பாராட்டிப் பெருமை செய்தால்
- தமிழுலகு பயன்பெறுமென் றெண்ணிச் சில்லோர்
சிக்கனமாய்க் குழுவொன்றை அமைத்தார்! ஆங்குத் :திருவாரூர் இராமனுடன், சலகை கண்ணன்
மக்கலிட்டுப் பார்த்தார்கள் முடியா மற்போய்
- முறையிட்டார் அண்ணனிடம் வெற்றி பெற்றார்!
</poem>