இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
91
<poem>
களிப்படைய முடியாத சூழல் கண்டோர்
- கழகத்தின் சார்புடைய இதழில் எல்லாம்
வெளிப்படையாய் ஈரணிகள் அமைந்த தீங்கை
- விலக்கிடவோ வழியின்றித் திகைத்து நின்றார்!
துளிப்பகையும் மலையளவாய்த் தோன்று மாறு
- தூத்துக்குடி மாநாட்டைத் தவிர்த்தார் அண்ணா!
இளிப்போர்க்கும் இடங்கொடுக்கா வண்ணம், அய்யா
- இறங்கிவந்தே, அண்ணனுக்கும் அமைதி தந்தார்!
ஈரோட்டில் அண்ணாவின் தலைமை யின்கீழ்
- ஏற்பாடு செய்தார்ஓர் தனிமா நாடே!
சீரோடு நடப்பதற்குத் தாமே நேரில்
- செயல்புரிந்தார்! அண்ணாவை ஊர்வ லத்தில்
யாரோடும் அமர்த்தாமல் தனியாய் வைத்தே,
- இளைஞர்போல் தொண்டரொடும் நடந்தா ர்அய்ய
தேரோடும் திருவிழாதான்! திருவி. க.வும்
- 'திராவிடத்தைப் பெறஉழைப்போம்' என்றார்
ஆங்கே