இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
102
அண்ணா-சில நினைவுகள்
- எண்ணத்தை எழிலுருவில் தந்திடும் ஆற்றலதை
- ஏற்ற முறையில் பெற்றுள்ள கவிஞர் அலர்.
- கவிதை, சிந்தனைக்குத் தேனளிக்கும்.
- அத்தேனே
- மாமருந்துமாகிவிடும்
- சீர் இழந்து தவிக்கின்ற தமிழ்ச் சமுதாயம் தனக்கும்.
இடையிலே ஒரிடத்தில் ‘கவிதை’ என்பதற்கு அண்ணா கூறும் இலக்கணம், கவிஞர் என்போர் அனைவரும் சிந்தை யிற் பதிக்க வேண்டிய சொற்களாகும் :
- அறிந்ததனை அறிந்தோர்க்கு அறிவிக்கும் போதினிலே
- அறிந்ததுதான் என்றாலும்,
- எத்தனை அழகம்மா! என்று
- அறிந்தோரையே மகிழவைக்கும் அருங்கலையே,
- கவிதையாகும்.
இதற்கும் பிறகு, என் கவிதைகளின் தனிச்சீர்மை என்ன என்பதையும் அண்ணா விண்டுரைக்கின்றார் :-
- அணிதெரியும் என்பதற்காய் ஆக்கித் தரப்பட்ட
- வணிகப் பொருள் அல்ல அவர் கவிதை சமூகப்
- பிணிபோக்கும் மருந்தளிக்கின்றார்,
- கவிதைத் துளி வடிவில்.
- பருகிட இனிப்பதது; உட்சென்றதும்
- பிணிபோக்கிப் புதுத்தெம்பு தருவதது.
இறுதியாக முற்றாய்ப்பு வரிகள் கட்டாணி முத்துகள் :
- இக்கவிதை நூலினைத் தந்தவர் என் நண்பர்.
- பெருமை அடைகின்றேன்
- இத்தகைய நண்பர்தனைப் பெற்றவன்
- நான் என்பதனால்.