பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திரைப்படம் பார்த்ததால் - உருப்பெற்ற க(வி)தை

போட்மெயில் எனப்படும் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரயில் மாயூரம் சத்திப்புக்கு இரண்டுங்கெட்டான் நேரத் தில் சென்னையிலிருந்து வந்து சேரும். அதாவது-2.15 மணிக்கு. அண்ணா வருகிறாரென்பதால் முன்னதாகவே விழித்தெழுந்து ரயிலடிக்கு வந்துவிட்டேன். தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லக் கொத்தங்குடி G ராமச் சந்திரன் ஒரு காருடன் வந்து காத்திருக்கிறார். அது 1965 ஆம் ஆண்டின் மார்கழிக் குளிர்காலம்.

இதில் வந்து இறங்கியவுடன் வழக்கமாகத் தூங்குவார் அண்ணா, ஆனால் அன்றைக்கு G. R. வீடு போய்ச் சேர்ந்ததும், ஒரு சோபாவில் உட்கார்ந்து கொண்டு, தன் பெட்டியைக் கேட்டார். ஜியார் எடுத்து வந்தார். அண்ணா அதைத் திறந்து ஒரு கற்றைத் தாள்களைக் கையி லெடுத்தார். எழுதப்பட்ட காகிதங்கள் 30, 40 பக்கமிருக்கலாம். “ஏண்ணா, படுக்கலியா?” என்று கேட்ட என்னை, “அப்புறம் படுக்கலாம். நீ இங்கே வந்து உட்காரு” என அழைத்தார்கள். அருகிலேயே போய் அமர்ந்தேன். “இந்தப் பேப்பரை வச்சுக்கோ, வீட்ல போயி படிக்கலாம். இப்ப நான் சொல்ற கதையெக் கேளு. போன வாரம் டெல்லியிலே ஒரு இங்லீஷ் படம் பார்த்தேன். அந்தக் கதை என்னெ ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணினதாலே, அதை அப்படியே இதிலே எழுதி பிருக்கேன், நீ உன்னுடைய பாணியிலே அதைக் கவிதையா ஆக்கிக் கொடு! “காஞ்சி” பொங்கல் மலரில் வெளியிடலாம்” என்ற பீடிகையுடன் கதை தொடங்கினார்கள்,