இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிஞர் கருணானந்தம்
169
- கண்ணாடிப் பேழைக்குள் கண்ணைக் கவ்வும்
- கணக்கற்ற பொன்னகைகள் இருக்கக் கண்டேன்!
- எண்ணாத எண்ண மெல்லாம் எண்ணி யெண் ணி
- ஏங்குகின்றேன்; இருப்பவற்றை அணிந்து கொண்டால்
- புண்ணான என்மனமோ ஆறும்; நானும்
- புதிதாக அணிமணிகள் செய்யச் சொல்லிக்
- கண்ணான கணவருக்குத் தொல்லை செய்யேன்!
- காண்பதையே கேட்கின்றேன் தந்தால் என்ன?
- நல்ல நல்ல பருப்புவகை நவதான் யங்கள்
- நம் வீட்டில் ஏராளம் குவித்து வைத்தோம்;
- நெல்லரிசி களஞ்சியத்தில் நிறைய வுண்டு;
- நேற்றுமுதல் சோறில்லை, கஞ்சி யுண்டோம்!
- பலவிதமாய் காய்கனிகள் தோட்ட மெங்கும்
- பசுமையுடன் குலுங்குகையில் பறித்தா லென்ன?
- இல்லையெனச் சொல் வீரோ, அத்தான்! இங்கே
- இல்லாத பொருளெதையும் கோர வில்லை!
- முப்புறமும் அரண் சூழ்ந்த காவ லுக்குள்
- மூன்றடுக்கு மேன்மாடம் முகிலைத் தீண்டும்;
- எப்பொழுதும் வற்றாத நீர் ஊற்றுக் கண்
- ஈன்றெடுத்த தாய்போல அருள் சுரக்கும்;
- ஒப்புரவாய், ஒற்றுமையாய், இனிது பேசும்
- உடன் வாழ்வோர் கடல் மணல்போல் ஏரா ளம்பேர்!
- அப்படியும் நடுமனையில் இடமில் லாமல்
- அநாதையென நடத்துகின்றீர், ஏனோ அத்தான்?
- உள்ளதைத்தான் கேட்கின்றேன்; இருந்தும் நீங்கள்
- ஒன்றையுமே அநுபவிக்கத் தருவதில்லை;
- உள்ளதெல்லாம் உண்மையுடன் உரைப்பீர்!” என்றே
- ஊடிநின்ற துணைநலத்துக் கென்ன சொல்வேன்!
- “உள்ளதைத்தான் கேட்கின்றாய்! ஆனால் கண்ணே,
- உரிமைநமக் கெதிலுமில்லை, அடிமை யாகி
- உள்ளதெல்லாம் பறிகொடுத்தோம்! உணர்வு பெற்றால்
- உரிமையுடன் உலவிடலாம், உலகில்!” என்றேன்.