பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

179


மூவரும் தனியே அமர்ந்து சிந்தித்தோம். அமைதியாக விருந்து நடைபெற வேண்டும். ஒட்டலில் அவ்வளவு நாகரிகமாகாது. யாருடைய வீட்டிலாவது செய்தால்தான், Privacy இருக்கும். கழகத் தலைவர்கள் வீட்டில் செய்வது முறையல்ல...ம்...நண்பர் ரகீம் கைகுலுக்கினார். “இங்கே எங்க மாமா வீடு ஒண்னு இருக்குதுகக. அநேகமா, அது இப்ப காலியாதான் இருக்கும். இங்கே தான், ஜெமினி ஸ்டுடியோவுக்குப் பின்னாலே. வாங்க, இப்பவே போய்ப் பார்ப்போம்! எனவே, புறப்பட்டோம். தனியான சிறிய பங்கள்ா. போதும் அருமை, அருமை” என்றேன். திருச்சியில் ஒய்வுபெற்றுத் தங்கியிருந்த எங்கள் தலைவர் ஏ. பி. துளசிராம் அவர்களையும் அழைத்துக் கொண்டோம். RMS ஊழியர்களில் முக்கியமானவர்கள் பங்கு பெற்றனர். கலைஞர் இல்லாமலா? அவரும் வந்தார் விருந்துக்கு!

ரகீமின் நேரடிப் பார்வையில் நெய் மணக்கும் மட்டன் பிரியானி, தக்க பக்கவாத்தியங்களுடன் பிரமாதம். நமது இயக்கத்தின் சிறந்த தொண்டரும், புகைப்பட நிபுண்ருமான நண்பர் சாமுவெல் அன்று எடுத்த படங்கள் என்னிடம் உள்ளன. அண்ணா எவ்வித இடையூறுமின்றிக் குறைந்த துர்ரமே வந்து செல்ல வேண்டியிருந்தது. கலைஞரும் இணைந்து சிறப்பித்தார். எங்கள் ஆனந்தத் துக்கும் அளவிண்டோ?

எந்த விளம்பரமும் இல்லாமல்தான் இந்த விருந்தை நடத்தினோம். ஆனால் அஞ்சல் துறையாயிற்றே-செய்தி பரவாமல் போகுமா? அனைத்து இந்திய மட்டத்தில், தொழிற்சங்க ரீதியாக, எங்களுக்கு எதிரிகள் வலது கம்யூனிஸ்ட் அனுதாபிகளான எங்கள் ஊழியர்கள். ஆனால் இடது கம்யூனிஸ்ட் அனுதாபிகள், என்றும் எங்கள் கூட்டணி. தி.மு.க. அனுதாபிகளின் கைதான் தமிழகத்தில் உயர்வு.