பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

அண்ணா—சில நினைவுகள்


அஞ்சல் துறைத் தோழர்களான G. லட்சுமணன் C. M. பரிபூரணம், கடலூர் N. C. அம்பலவாணன், திருச்சி மாணிக்கவாசகம், தொலைபேசித்துறை கண்க சொரூபன், முத்துராக்கப்பன் ஆகிய பல அருமை நண்பர்கள் என்னிடம் சண்டைக்கே வந்து விட்டனர். அண்ணா எங்களுக்கும் சொந்தமில்லையா என்று! இண்ங்குவது தவிர இவர்களோடு பிணங்க முடியுமா?

சரியென்று துணிந்து, அண்ணாவிடம் அடுத்த மாதமே. இதற்காகச் சென்று, விவரம் சொன்னேன். அருகில் - அப்போது பேராசிரியர் மா.கி. தசரதன், மாயூரம் தொகுதி. நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரவேலு இருந்தனர். “விருந்தை என் வீட்டில் வைத்துக்கொள்ளலாம் கவிஞர்” என்றார் தசரதன். அவர் சுத்த சைவம். பயமில்லை யல்லவா? அண்ணா ஒத்துக்கொண்டார்கள் வருவதற்கு.

இந்த விருந்தில் பிரியாணியில்லை. எல்லாமே மீன், மீன், மீன். பல்வகைத் தயாரிப்புகள். “எங்கே கருணா னந்தத்தைக் காணோம்” என்று அண்ணா வேடிக்கை யாகக் கேட்க, “அவரை மீன் மறைத்துக் கொண்டிருக்கிறது” என்று கலைஞர் கேலியாகப் பதில் கூற, நண்பர் சுபாசுந்தரம் ‘கிளிக்’ செய்துகொண்டே யிருந்தார்.

கடலூர் அம்பலவாணன் “எங்களுக்கும் உங்களுக்கும். தொடர்பு நெருக்கமாக ஏற்பட, ஏதாவது ஒர் அமைப்பு வேண்டும், அண்ணா!” என்று கோரினார். அண்ணா என் பக்கம் கையைக் காட்டி, “இதோ, இவர் ஒருவர் போதுமே!” என உறுதியுடன் பதில் உர்ைத்தார்கள். அனைவர்க்கும் மகிழ்ச்சியே!